திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

இதனை அடுத்து விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் வெளிநாட்டு பணமான 53 ஆயிரத்து 133 யூரோவை கடத்த இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் சதாம் உசேன் இடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூபாய் 46 லட்சம் ஆகும்.