பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் நிறைய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது. அரசு செயல்படுத்தி வரும் திட்டம் என்ற காரணத்தினால் உத்தரவாதமான வருமானம்  கிடைப்பது மட்டுமல்லாமல் சேமிக்கும் பணத்திற்கு எந்த அபாயமும் ஏற்படாது. மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள் இப்போது அரசாங்கத்திடமிருந்து பெரிய பலனை பெறுவார்கள். அதாவது இந்த திட்டம் குறித்து அரசு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 7.1 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. இதில் கூட்டு வட்டியின் பலன் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் நிதியமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறை மார்ச் 31-ஆம் தேதி அரசிடமிருந்து உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி வட்டி கணக்கிடப்படுகிறது. வெறும் 500 ரூபாய் முதலீட்டை தொடங்கிக் கொள்ளலாம் அதே நேரம் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்தை இதில் முதலீடு செய்து கொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல் பி பி எஃப் திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பின் கடன் மற்றும் பகுதியளவு திரும்பப்பெறும் வசதியையும் நீங்கள் பெறுவீர்கள். பி பி எஃப் வருமான வரி விலக்கின் பலனை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதில் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வு நிறைவடையும்போது பெறப்படும் பணம் ஆகிய மூன்றிற்கும் முற்றிலும் வரி விலக்கு உள்ளது. மேலும் நீங்கள் ppf திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். ஆனால் ஆறாண்டுகளுக்கு பின் தான் அதை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் ppf கணக்கில் பகுதி அளவு திரும்பப்பெறும் வசதியும் இருக்கிறது இதனை ஏழாவது ஆண்டில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.