பாலியல் வழக்கில் கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார். சுயம் கிருஷி படம் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக தடம்பதித்தவர் வீரேந்திர பாபு. இவர் மயக்கநிலையில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை வீடியோவாக பதிவு செய்து ச15 லட்சம் பணத்தை மிரட்டி பெற்றுள்ளார். தொடர்ந்து, அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வரவே, அவர் போலீசில் புகார் அளிக்க, வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டார்.