மத்திய  அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மாவட்ட செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட தலைவரையும் போலீஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்டவரிடம் வாங்கிய பணத்தை திரும்பத் கொடுக்காததால் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.