மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு தற்போது இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது. முன்னதாக கருணாநிதி பிறந்த தினத்தில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.