பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது மசூதிக்குள் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.