மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ‘தமிழர் தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரசில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினாலும், திமுக, அதிமுக, மதிமுக, மநீம என பல கட்சிகளில் இருந்தவர். ஜெ., முன்னிலையில் அதிமுகவை விமர்சித்து, அக்கட்சியில் இருந்து வெளியேறி மநீமவில் இணைந்த அவர், கமலின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்து வெளியேறி தற்போது புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.