சென்னையில் போக்குவரத்து போலீசாரின் வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்ட ரசீது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதி அருகே போக்குவரத்து விதிகளை மீறி போலீஸ் வாகனம் ஒன்று ரோந்து சென்றுள்ளது. இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டி செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அதன்பிறகு டுவிட்டரில் போலீசாரை டேக் செய்து சம்பந்தப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு போக்குவரத்து போலீசாரே போக்குவரத்து விதிகளை மீறலாமா என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு அபராதம் விதித்த ரசீதையும் அந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், உடனடி நடவடிக்கை எடுத்த  போக்குவரத்து போலீசாருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.