திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாரியநல்லூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் வெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி காகணம் கிராமத்தில் இருக்கும் ஏரிக்கு செல்வராஜ் மீன்பிடிப்பதற்காக வலையை எடுத்து சென்றார். இதனையடுத்து வலையில் சிக்கிய மீன்களை எடுப்பதற்காக தண்ணீரில் இறங்கிய போது செல்வராஜின் கால் வலையில் சிக்கியது.

இதனால் தண்ணீரில் மூழ்கி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஏரியில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.