ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பத்தி கிராமத்தில் பகவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் இருக்கும் ஏரி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பகவதிக்கு சொந்தமான பசுமாடு குழியில் தவறி விழுந்தது.

இதனையடுத்து மாட்டின் சத்தம் கேட்டு ஓடி வந்த பகவதி மாடு குழியில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி குழியில் இருந்து மாட்டை பத்திரமாக மீட்டனர்.