கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய விளை இரும்பிலி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜினிதா குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஜினிதா குமாரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் குமாரி கோயம்புத்தூர் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இருவரும் காதலித்து வந்தனர். போலீசார் தங்கள் தேடுவதை அறிந்த இருவரும் அருமனை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் குமாரியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.