காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுபுதூரில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் மகன் தேவகணபதி கொரியர் கம்பெனியில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவகணபதி தனது நித்தியானந்தத்தின் வீட்டிற்கு சென்று சித்தப்பாவின் மகன் நிர்மலா நந்தன் என்பவருடன் ஆட்டுபுத்தூர் ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேவகணபதி மட்டும் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தேவ கணபதி தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நிமலா நந்தனும், தகவல் அறிந்து வந்த குடும்பத்தினரும் தேவகணபதியை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தேவ கணபதியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.