காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டையில் தாமு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தாமு தனது வீட்டு திருமணத்திற்கு துணி எடுப்பதற்காக குடும்பத்துடன் குரோம்பேட்டையில் இருக்கும் பிரபல துணி கடைக்கு காரில் சென்றார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரையும் துணிக்கடையில் இறக்கிவிட்டு தாமு காரை பார்க்கிங் ஏரியாவிற்கு ஓட்டி சென்றார். அப்போது பல்லாவரம்- துரைப்பாக்கம் மேம்பாலம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாமு உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடமையாக பாதிக்கப்பட்டது.