தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலஅலங்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்கு ரமேஷ் மீது ஏதோ ஊர்ந்து சென்றது. இதனால் ரமேஷ் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது கண்ணாடிவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ரமேஷின் குடும்பத்தினர் வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பின்னர் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.