கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர்- குஞ்சுபாளையம் சாலையில் பழைய வாகனங்களை உடைக்கும் குடோன் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களில் இருந்து எடுக்கும் சீட், டயர், ஆயில் உள்ளிட்டவற்றை ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் அந்த குவியலில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.