கடலூர் மாவட்டம் அருகே கொதிக்கும் வெண்ணீரில் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் மற்றும் கனிமொழியின் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பிரித்தீஷா என்ற மூன்று வயது மகளும் கவின் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில் ஒரு வயது குழந்தை கவினை குளிப்பாட்டுவதற்காக வீட்டு தோட்டத்தையும் படிக்கட்டு அருகில் விறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெண்ணீர் போட்டு வைத்துள்ளனர். இதனிடையே குழந்தை எதிர்பாராத விதமாக தவறி வெந்நீரில் விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.