புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து பிடிப்பட்ட பாம்பு வனதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.