தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் இந்த விழாவில் அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த விழாவின் முக்கிய நாளான தேரோட்டம் வருகின்ற மே 12ஆம் தேதி நடைபெற உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக மே 27ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் முக்கிய பணிகளுக்காக மாவட்ட கருவூல அலுவலகம் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.