தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்கள் மட்டும் புகழ் பெற்ற கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான வைகாசியில் வைகை பெருவிழாவை விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடம் மே 14ஆம் தேதி முதல் வைகாசி பெருவிழா தொடங்க உள்ளதால் விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சி மே 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு மே 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.