திருச்சியில் இருந்து கங்கா நகர் செல்லும் ஹம்ஸாபர் விரைவு ரயிலில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  குஜராத்தில் உள்ள வல்சா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் தீ விபத்து நேரிட்டு இருக்கிறது. ரயில் இன்ஜின் பின்புறத்தில் உள்ள இரண்டு பெட்டிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட ஹம்ஸாபர் விரைவு நிலையில் இருந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் ஜெனரேட்டர் பெட்டியில் தீப்பிடித்து பக்கத்து பெட்டிக்கும் பரவியதும் தெரிய வந்திருக்கிறது