திருச்சியிலிருந்து குஜராத்தின் ஸ்ரீ கங்கா நகர் வரை இயக்கப்படும் ஹம்சபர் விரைவுரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயிலில் ரயில் இன்ஜினின் பின்புறம் உள்ள இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் பயணிகள் உடனடியாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் பற்றி காவல்துறையினரும் ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள்.