நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கு முதலில் அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகளை அணுக வேண்டும். அவர்கள் உங்களின் பொருளாதாரத்தை பொறுத்து தகுதியுடைய விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டையையும் வங்கி கணக்கு புத்தகத்தையும் வழங்குவார்கள்.

இதில் கிசான் அட்டை வாங்கியவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் இடம் பற்றிய விவரம், பணம் பெரும் வரம்பு, செல்லுபடி ஆகும் காலம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற தகவல்கள் இடம்பெற்று இருக்கும் எனவும் இந்த கணக்கின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.