கரூர் மாவட்டத்தில் உள்ள கீழ தண்ணீர் பள்ளியில் அம்சவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அம்சவள்ளி பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் போரை மாட்டு கொட்டகை அருகே அடுக்கி வைத்துள்ளார். நேற்று மாலை திடீரென வைக்கோல் போரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.