திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் தோப்புப்பட்டி பகுதியில் வேன் டிரைவராக மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான நாகேந்திரன், விக்னேஷ் ஆகியோருடன் திண்டுக்கல்-கரூர் சாலையில் ஆயில் மில் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பியுள்ளார்.

இதனையடுத்து வேனை இயக்க முயன்ற போது திடீரென எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணிக்கம் தனது நண்பர்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களுடன் இணைந்து வேனை சிறிது தூரம் தள்ளி சென்று நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. விரைந்து செயல்பட்டு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வெளியே வேனை கொண்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.