சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை சிக்னல் அருகே ஏராளமான துணிக்கடைகள் அமைந்துள்ளது. நேற்று ஒரு துணிக்கடை மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் துணிக்கடை மாடியில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டதால் மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால் இந்த தீ விபத்தில் மாடியில் இருந்து துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.