தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விவசாய நிலத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள மக்காசோள பயிர்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.