கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபாகரன் திருச்சி துவாக்குடி பகுதியில் இருக்கும் தனது நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள கடந்த 15-ஆம் தேதி மொபட்டில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைந்த பிரபாகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சங்கீதாவும் அவரது மகன்களும் பிரபாகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதனால் பிரபாகரனின் சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு சென்னையில் இருக்கும் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது.