சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் தனது வயலுக்கு சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அழகு பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அழகு பாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான தீபக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.