தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூன்மாரி கொட்டாய் பகுதியில் விவசாயியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மோட்டாரை நிறுத்த சென்றபோது ராஜமாணிக்கம் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ராஜமாணிக்கத்தின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.