தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை சுற்றி பார்ப்பதற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரண் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு வைத்து நண்பர்கள் மது அருந்துள்ளனர். இதனையடுத்து அனைவரும் சின்னாறு அணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது போதையில் கிரண் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிரணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.