திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களம் கொம்பு எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார் நேற்று கோபி, அதே பகுதியில் வசிக்கும் வினித், ஆனந்த், தினேஷ் உள்பட ஏழு பேர் பட்டிவீரன்பட்டி அருகே இருக்கும் மருதாநதி அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் கோபி தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு கோபியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.