மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனியார் நிறுவனமான டாடா குழுமத்துக்கு கை மாறியது. கடன் பிரச்சனை காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் தனியார் வசமாகப்பட்ட நிலையில் ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியானது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தன்னார்வ (VRS) ஓய்வு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 30-ம் தேதியோடு கால அவகாசம் முடிவடைந்த  நிலையில் தற்போது மே 31-ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பறக்கும் விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் (40 வயதுக்கு மேற்பட்டவர்கள்) விண்ணப்பிக்கலாம்.