சமூக வலைதளங்களில் பிரபலமாகவும், வீடியோக்களுக்கு லைக்ஸ் மற்றும் வியூஸ் பெறவும் மக்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளனர். அப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளைஞர், சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு பயங்கரமான புலியின் வாயில் தனது கையை வைத்து ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து, பலவிதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த திகிலூட்டும் வீடியோவை பாகிஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் நவுமான் ஹசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
லாகூரைச் சேர்ந்த நவுமான் ஹசன், தனது செல்லப் புலியான ‘ராக்கி’ உடன் இந்த வீடியோவில் தோன்றுகிறார். வீடியோவில், அவர் புலியின் வாயில் தனது கையை தைரியமாக வைப்பதை பார்க்க முடிகிறது. சில வினாடிகள் மட்டுமே உள்ள காட்சி மிகவும் பயமுறுத்துவதாக உள்ளது,
View this post on Instagram
ஏனெனில் புலி ஒரு காட்டு விலங்கு, எப்போது வேண்டுமானாலும் தனது உண்மையான உருவத்தை காட்டலாம். இந்த வீடியோ 66,000-க்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்று வைரலாகியுள்ளது. கருத்து பகிர்வு பகுதியில், சிலர் நவுமானின் துணிச்சலை பாராட்டினாலும், பெரும்பாலானோர் இதை ‘முட்டாள்தனம்’ மற்றும் ‘பைத்தியக்காரத்தனம்’ என விமர்சித்துள்ளனர்.
ஒரு நெட்டிசன், “பாசம் காட்டுவது சரிதான், ஆனால் புலி உண்மையாக கோபப்பட்டால் என்ன செய்வாய்?” என்று கேள்வி எழுப்ப, மற்றொருவர் “இது முட்டாள்தனத்தின் உச்சம்” என கருத்து தெரிவித்தார். 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களைக் கொண்ட நவுமான், தனது செல்ல காட்டு விலங்குகளுடன் இதுபோன்ற வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து, இணையவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறார்.
