ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் அளிக்கப்படும் நிலையில், அதனை தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதில்லை. இதன் காரணமாக ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வழக்கு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர இருக்கிறது