ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு வானிலை அறிக்கை எனக் குறிப்பிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இடைத்தேர்தலை பங்கமாக விமர்சித்துள்ளார். அவரது ஆட்டோவில், எங்கு பார்த்தாலும் சூறாவளி. அனைத்து புயல்களும் மையம். வரலாறு காணாத பண மழையில் நனையும் வாக்காளர்கள்!. மனமகிழ்ச்சி. அதன்பின் 3 வருடத்திற்கு வறட்சி நிலவும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.