புதுச்சேரியையும் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக ஏர்சபா விமான சேவை நிறுவனம், சிறிய விமானங்களை வருகிற தீபாவளி பண்டிகை முதல் இயக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து மதுரை கோவை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பதி, தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. கோவை மற்றும் பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை சோதனை முறையில் விமானங்களை இயக்கி பார்த்துள்ளது. இது குறித்து ஏர் சபா மேலாண் இயக்குனர் கே.முருகபெருமாள் கூறியதாவது, 19 இருக்கைகள் கொண்ட குறைந்த தொலைவு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் கோவை என இரண்டு விமான நிலையங்களுடன் மற்ற நகரங்களை இணைக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இது போன்ற ஐந்து விமானங்களை செக் குடியரசிடமிருந்து முன்பதிவு செய்துள்ளோம். அந்த விமானங்கள் அனைத்தும் விரைவில் தமிழகத்திற்கு வரும் இந்த வழித்தடங்களில் விமானங்களை அனுமதி கூறியிருக்கிறார். இதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம். வருகிற தீபாவளி பண்டிகையின் போது இந்த சிறிய ரக விமானங்களை இயக்கும் திட்டம் தொடங்கும் என அவர் கூறியுள்ளார். அதேபோல் ஏர்சபா நிறுவனத்தை பொறுத்தவரை வணிக விமானங்களை இயக்குவதற்காக அதன் முதல் முயற்சி இது. நாங்கள் பெரிய விமான ஆபரேட்டர்களுடன் போட்டியிடவில்லை. ஆனால் எங்களுடையது அவர்களின் இயக்கத்திற்கு துணையாக இருக்கும் என அவருக்கு கூறியுள்ளார்.

ஒரு பயணத்திற்கு வருவதற்கு 2000 முதல் 2500 வரையிலான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள புதிய விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்க ப்படுகின்றன. புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் பயணிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக 2014 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் கடந்து 2015 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு சில மாதங்களிலேயே அதுவும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் உதாந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

இதற்காக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக  விமானம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது. இதனை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். சிறிய  ரக விமான சேவை தொடங்கியுள்ள தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சதீஷ்குமார் விமான சேவை குறித்து முதல்வர் உள்ளிட்டோருக்கு விளக்கம் அளித்துள்ளார்.