ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

வாக்குப் பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க தாமதமானதால் வாக்காளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து நீண்ட நேரம் நிற்க முடியாததால் வாக்காளர்கள் தரையில் அமர்ந்தபடி வாக்களிக்க காத்திருக்கின்றனர்.