ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

வாக்குப் பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 1,01,392 பேர் வாக்களித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.