இபிஎஃப்ஓ பென்சன் திட்டத்தில் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதை சரி செய்த பிறகு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தற்போது இபிஎஃப்ஓ நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அதிக பென்சன் தொகை பெற விரும்பும் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என இபிஎஃப்ஓ அறிவித்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 26 ஆகும். மேலும் அதிக பென்சன் தொகை பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பெற்று 20 நாட்களுக்குள் அதை ஆய்வு செய்து திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும் என இபிஎஃப்ஓ சுற்றரிக்கை அனுப்பி உள்ளது.