EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு EPFOஉறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக டென்ஷன் பெற இருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பம் பெற்ற தேதியிலிருந்து அடுத்த 20 நாட்களுக்குள் உடனடியாக செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் அதிக பென்ஷன் பெறுவதற்கு மே மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக பென்ஷன் பெற விருப்பமுள்ளவர்கள் உடனடியாக ஜூன் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் விண்ணப்பங்களில் ஏதாவது பிழைகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.