உணவு மற்றும் நுகா்வோா் நலத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிா்ணய ஆணையத்தின் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. குறுதொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தரச்சான்றிதழ் பெறுவதுக்குரிய கட்டணங்களில் 80% வரை சலுகைகளை அறிவிக்கவும், விற்பனையாகும் தங்கநகைகளின் தரத்தை ஒழுங்கப்படுத்தவும் ஹால்மாா்க் அடையாள எண் கொண்ட நகைகளின் விற்பனையை மட்டும் அனுமதிப்பது என முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்பின் நுகா்வோா் நலத்துறை கூடுதல் செயலாளா் நிதி காரே செய்தியாளா்களை சந்தித்து கூறியதாவது “நுகா்வோா் நலனை கருதி தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஹால்மாா்க் அடையாள எண்னை பதிக்கும் திட்டம் சென்ற 2021ம் வருடம் முதல் நடைமுறையில் இருக்கிறது. 200-க்கும் அதிகமான மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. ஆகவே தனித்துவமான 4(அ)6 இலக்க ஹால்மாா்க் அடையாள எண்கள் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருள்களை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது” என்று கூறினார்.