15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டிலுள்ள மத்திய-மாநில அரசுகளின் வாகனங்களை இனிமேல் இயக்க முடியாதென மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள மத்திய -மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான (அ) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு, மாநகராட்சி (அ) நகராட்சி (அ) பஞ்சாயத்துகளிலுள்ள வாகனங்கள் இனி இயக்க முடியாது.

மேற்கண்ட அலுவலகங்களில் 15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டிலுள்ள வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும். அதோடு அவற்றிற்குரிய பதிவுகளும் புதுப்பிக்கப்படாது என்று மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இந்த புது விதி 2023 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.