ஆந்திரா காளஹஸ்தி கோயிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால் ரூபாய்.5000 அபராதம் விதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இக்கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினசரி பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த நிலையில் காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதன்படி கோவிலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ செல்போன் எடுத்து சென்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதோடு அபராதத்தை செலுத்த தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்றும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.