கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எல்.சி முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ராஜேந்திரன்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், நான்கு மாத பெண் குழந்தையும் இருக்கிறது.

நேற்று மதியம் ராஜேந்திரன் தனது நண்பர்களான பிரேம்குமார், செல்லப்பா, தமிழ்ச்செல்வன், உத்தண்டி ஆகியோருடன் நெய்வேலி 16-வது வட்டத்தில் இருக்கும் ஹோட்டலில் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் கோபமடைந்த செல்லப்பா ஹோட்டலில் இருந்த விறகு கட்டையால் ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பக இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்ததும் நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரனின் நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.