ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஏகே பழனியப்பன் வீதி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் பிரபு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.