தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் எச்டிஎஃப்சி நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி வங்கியின் MCLR விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் என அனைத்து இஎம்ஐ கடன்களும் உயரும் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு MCLR விகிதம் 8.60 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 8.65 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் நவம்பர் 7ஆம் தேதி முதல் இந்த கடன் தொகை அதிகரிப்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.