வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரதேசத்திற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இந்த மாதம் நவம்பர் 10ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கட்டண தரிசனத்தில் 22 லட்சத்து 5 ஆயிரம் பேரும், இலவச தரிசனத்தில் நான்கு லட்சத்தி 75 ஆயிரம் பேரும் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.