நடிகர் இமான் அண்ணாச்சி சின்னத்திரை மட்டுல்லாமல் பல்வேறு திரைப்படங்களிலும் காமெடியனாக நடிக்கிறார். இவரது காமெடிக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வ குமார் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கொடுத்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, அவரது செல்போனுக்கு ஒரு SMS வந்தது எனவும் 10 ஆயிரம் பணம் வரும் என நம்பி அதில் வந்த லிங்க்கை க்ளிக் செய்ததால் தன் வங்கிக்கணக்கில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேல் பணம் திருடப்பட்டுவிட்டது எனவும் போலீசில் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.