புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வசதி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மின் கம்பியாளர் முருகேசன் என்பவர் வடிவேலுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கி அவர்களிடம் இருந்து பணம் வாங்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மின்சார இணைப்பிற்கு உரிய அனுமதி வாங்காதது தெரியவந்தது. இதனால் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.