திருச்சி விமான நிலையம் காமராஜ நகரில் பீர்முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பீர்முகமது நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் குழந்தைக்காக சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் அமர்ந்து பீர்முகமது குடிபோதையில் ஆடினார்.

அப்போது சேலை கழுத்தை இறுக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பீர்முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பீர்முகமதுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.